2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உருக்கு பாலங்கள் கொங்கிறீற் பாலங்களாக மாற்றம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

ஆனையிறவு, பரந்தன் பகுதியிலுள்ள உருக்கு பாலங்களை அகற்றிவிட்டு கொங்கிறீற் பாலங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏ-9 வீதியில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட உருக்கு பாலங்கள் போர் காலத்தில் அழிவடைந்த நிலையில் அரசாங்கத்தினால் மீள அதேபோல உருக்கு பாலங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் உருக்கு பாலத்தின் தரைப்பகுதி தகடுகளாக இருந்தமையாலும்; வழுக்கும் தன்மை அதிகமாக இருப்பதினாலும்; பெருமளவு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இதனைக் கருத்தில் கொண்டே உருக்கு பாலங்களை அகற்றிவிட்டு கொங்கிறீற் பாலங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .