2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கிய இந்திய மீனவர்களை மீண்டும் 14 நாட்கள் தொடர் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை (03) மாலை கரையொதுங்கிய இந்திய இராமேஸ்வரத்தினைச் சேர்ந்த நான்கு மீனவர்களை, நெடுந்தீவு கடற்படையினர் கைதுசெய்து நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி நான்கு மீனவர்களையும் கடந்த வெள்ளிக்கிழமை (04) ஊர்காவற்துறை நீதிமன்றில் நெடுந்தீவு பொலிஸார் ஆஜர்ப்படுத்தியபோது, நான்கு மீனவர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

14 நாட்கள் விளக்கமறியலைத் தொடர்ந்து, மேற்படி மீனவர்களின் வழக்கு இன்று (17) வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி நான்கு மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .