2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞனுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நாரந்தனை பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம் ஜெவ்ரி இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதி 24 வயதுடைய இளைஞர் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக நாரந்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், அதே இடத்தினைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே, ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .