2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெள்ளிக்கிழமை மதுபானம் விற்றவர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை போயா தினத்தன்று யாழ்.பண்டத்தரிப்பில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

பண்டத்தரிப்பு பகுதியில்  போயா தினத்தன்று சட்டவிரோதமான முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இளவாலைப் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்கபண்டாரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்த இடத்தினைச் சோதனையிட்டனர்.

இதன்போது, விற்பனைக்கு தயாரான நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 58 மதுபானப் போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.

சந்தேக நபரை எதிர்வரும் திங்கட்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .