2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நகர சபை தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

பருத்தித்துறை நகரசபை தலைவருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் காணி உறுதிப்பத்திரத்தினை அழித்து மீண்டும் வேறு விதமாக மாற்றி மோசடி செய்த குற்றத்திற்காகவே பருத்தித்துறை நகர சபை தலைவர் சபாநாயகம் ரவீந்திரன் மற்றும் செல்வராசா பரமேஸ்வரராஜா ஆகிய இருவருக்கும் எதிராக மூன்று பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இருவரையும் ஒவ்வொரு பிரிவு வழக்கிலும் தலா இரண்டு சரீரபிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதித்துள்ளதுடன், வழக்கினை எதிர்வரும் டிசெம்பர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .