2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தொலைத்தொடர்பு நிலையத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். காங்கேசத்துறை - மருதனார்மடம் சந்தியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள்  திருட்டுப்போயுள்ளன.

இன்று வியாழக்கிழமை காலை தொலைத்தொடர்பு நிலையத்திற்குச் சென்ற அதன் உரிமையாளர், தொலைத்தொடர்பு  நிலையத்தின் கூரை பிரிக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.  மேலும்,  அங்கிருந்த 47 கையடக்கத் தொலைபேசிகள் திருட்டுப்போயுள்ளதையும்; அவர் அவதானித்துள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .