2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புதிய அதிவேக தபால் சேவை ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


புதிய அதிவேக தபால் சேவை உத்தியோகபூர்வமாக இன்று வியாழக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரட்ணவின் ஆலோசனைக்கு அமைவாக அதிவேக தபால் சேவை குருநாகல், ஹம்பாந்தேட்டை, காலி, இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
வவுனியாவிலிருந்து யாழிற்கான அதிவேக தபால் சேவை இன்று வியாழக்கிழமை 1.30 மணியளவில் யாழ். அஞ்சல் திணைக்களத்தினை வந்தடைந்த போது, வடமாகாண அஞ்சல் மா அதிபர் நல்லதம்பி இரட்ணசிங்கம் மற்றும் யாழ். பிரதேச அஞ்சல் அதிபர் காசிப்பிள்ளை புஸ்பநாதன் ஆகியோர் முதலாவது பொதியினைப் பொறுப்பேற்றனர்.

அத்துடன், யாழிலிருந்து வவுனியாவிற்கான அதிவேக தபால் சேவை இன்று வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடமாகாண அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .