2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாற்று திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி  மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட அதிகாரிகள் குழுவினரால் இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார்  உள்ளிட்ட வாகனங்களை செலுத்த தகுதியான  உடல்  நிலையைக் கொண்ட 70 இற்கும் மேற்பட்டவர்கள் தெரிவு  செய்யப்பட்டு  மருத்துவ  பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை, வாகன  ஓட்ட  பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .