2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறப்பு அங்காடி வியாபார நிலையத்தில் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அலேசியஸ் நிதர்சன்

யாழ். ஊரெழு வீரசக்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள சிறப்பு அங்காடி வியாபார நிலையமொன்றில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு திருடப்பட்டுள்ளன.

மேற்படி வியாபார நிலைய ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (11) காலை வியாபார நிலையத்திற்குச் சென்றபோது, நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்கள் திருட்டுப்போயுள்ளமை தெரியவந்தது.

இதுதொடர்பாக மேற்படி வியாபார நிலையத்தின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .