2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுகின்றன'

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பினை; தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள 5863 குடும்பங்களில் 1129 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த சமயம் ஒரே குடும்பங்களாக இருந்தவர்கள் தற்போது, தனித்தனி குடும்பங்களாக மாறியிருக்கின்றனர். இவர்களும் தங்களுக்கு காணிகள் வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். ஆனால் இவர்களின் ஒருவருக்கு உரித்துடைய காணியே வலி.வடக்கில் இருக்கின்றது.

அத்துடன், வலி.வடக்கில் காணி வைத்திருப்பவர்கள் இன்னொருவருக்கு தமது காணியினை கொடுக்கவும் முன்வரமாட்டார்கள். இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், அவர்களின் தொழில் மற்றும் கலாசாரத்தினைக் கருத்திற்கொண்டும் அதற்கேற்ற இடங்களில் காணிகளை வழங்கி வருகின்றோம்.

அவ்வாறு காணிகள் வழங்கி மீள்குடியேற்றம் செய்யப்படுவர்கள் அந்த பகுதியில் தமது உறவினர்களுடன் கூடி வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதனை அம்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன்;, பலாலி வடக்கு, பலாலி கிழக்கு மற்றும் வலளாய் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளவர்களின் காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .