2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு வலியுறுத்துவேன்: கெமரூன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கெஇன்று (15) மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் வலி. வடக்கில் முகாம்களில் வசிக்கும் மக்களை இன்று பிற்பகல் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த மக்களிடம், நீங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தீர்கள்? உங்களுடைய காணிகளை யார் வைத்திருக்கின்றார்கள்? இவ்வளவு காலமும் ஏன் மீள்குடியேறாமல் இருக்கின்றீர்கள்? போன்ற கேள்விகளை அவர் கேட்டறிந்தார்.

அதற்கு பதிலளித்த மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எங்கள் காணிகளை இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயமாக வைத்திருப்பதுடன், அங்கு இராணுவக் குடியேற்றங்களையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் இதற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அதற்குப் பதிலளித்த பிரதமர், 'இது தொடர்பாக அரசாங்கத்தினை வலியுறுத்தி உங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • abdul janab Friday, 15 November 2013 04:39 PM

    இலங்கை அரசாங்ம் கமெரொனுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இராணுவத்தை அகற்றி மக்களுக்கு காணிகள் கொடுக்குமா? இனவாத கட்சிகள் அதற்கு உடன்படுவார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .