2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியீடு

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ்.மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (20) கல்லூரி அதிபர் திருமதி கமலாராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண அஞ்சல்மா அதிபர் என்.இரட்ணசிங்கம் நூற்றாண்டு நினைவு முத்திரையினை வெளியிட்டு வைக்க விஞ்ஞான தகவல் தொழில்நுட்பத்துறை சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .