2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் தேசிய உற்பத்தித் திறன் செயலமர்வு

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 'தேசிய உற்பத்தி திறன் விருதுகள்'  தொடர்பான செயலமர்வு வியாழக்கிழமை (30) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் செல்லமுத்து ஸ்ரீநிpவாசன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்; ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஹில்மி மார்க்கர், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வடமாகாண அலுவலர் எம்.எம்.பாத்திமா ஆகியோர் வளவாளராக கலந்துகொண்டார்.

இச்செயலமர்வில் உற்பத்தித் திறன்மேம்பாட்டு அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 2012-2013 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்துறையில் சிறப்பாகச் செயற்பட்டவர்களுக்கு விருது வழங்குவது தொடர்பாகவும் தரநிர்ணயம், அதன்படிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி ஆகிய 4 பிரதேச செயலகங்களின் செயலர்களும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிப்பணிப்பாளர் கு.சுகுணதாஸ், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கே.கிருஸ்ணகுமார், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .