2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தண்டவாளங்களை திருட முற்பட்ட இருவருக்கு பிணை

Super User   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பழைய தண்டவாளங்களை திருட முற்பட்ட இருவர் 50,000 ரூபா சரீர பிணையில் யாழ். சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் விடுவித்தார். குறித்த நபர்கள் நேற்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே, நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

குறித்த நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொடிகாமப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 17 பழைய தாண்டவாளங்களை தங்களின் இரு சைக்கிள்களில் ஏற்றி செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்ததையடுத்து குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது இரு சைக்கிள்களுடன் தண்டவாளங்களையும் கைப்பற்றியதாக கொடிகாமம் மேலும் பாலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .