2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். விபத்தில் நால்வர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (02) காலை இடம்பெற்ற  வாகன விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்  தெரிவித்தனர்.

சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியானது  வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்பாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன்  மோதி  குடைசாய்ந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த கந்தசாமி பாக்கியலக்சுமி (வயது 50), கந்தசாமி சுதர்சினி (வயது 24), கந்தசாமி ஜான்சி (வயது 14), செந்தூரன் நிசாந்த் (வயது 07) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து  தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X