2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருட்டுப் பொருட்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ஐ.நேசமணி

யாழ். அராலிப் பகுதியில் திருடப்பட்ட  பொருட்களை சைக்கிள்களில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை  (02) கைதுசெய்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இவர்களிடமிருந்து 04 மின் மோட்டார்கள், பித்தளை குத்துவிளக்குகள், குடங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத்; தொடர்ந்து அராலி தெற்கைச் சேர்ந்த 35 வயதான  ஒருவரையும்   தெல்லிப்பழையைச்  சேர்ந்த 26 வயதான ஒருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .