2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறை வீதியில் நடந்துசென்ற ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதியதால் படுகாயமடைந்த  இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (03) இரவு அனுமதிக்கப்பட்டதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த நடந்துசென்ற மனோகரன் மதிவதன் (வயது 22), மோட்டார் சைக்கிளில் சென்ற எஸ்.விஜிதரன் (வயது 28) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

மேற்படி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனத் தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளதாகவும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .