2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இரணைமடு விவகாரம்; யாழ். ஆயரிடம் விவசாயிகள் முறையீடு

Menaka Mookandi   / 2014 மார்ச் 04 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் வரை கொண்டுசெல்வதால் கிளிநொச்சி விவசாயிகள் எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைகள் குறித்து யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையிடம் தாம் தெரிவித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ். ஆயருடன், ஆயர் இல்லத்தில் இன்று (04) இடம்பெற்ற சந்திப்பிலேயே தாம் தெரிவித்ததாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

'இரணைமடு விவகாரம் தொடர்பில் வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆய்வின் முடிவு குறித்த விடயங்களும், மாகாணசபை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பிலும் யாழ். ஆயரிடம் தாம் தெளிவாகக் கூறியதாகவும் இரணைமடுக் குளத்தினை வந்து பார்வையிடுமாறு ஆயருக்கு அழைப்பு விடுத்ததாகவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தாம் ஏற்கனவே அறிந்திருப்பதாகவும் இதன் உண்மையான முழுமையான நிலைப்பாட்டினை தற்போது தாம் அறிந்து கொண்டதாகவும் யாழ்.ஆயர் தம்மிடம் தெரிவித்ததாகவும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .