2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினரின் உதவியுடன் வீதிப்புனரமைப்பு பணிகள்

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்றுமுறிப்பு துணுக்காய் பிரதான வீதி, இராணுவத்தினராலும் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடனும் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் ரி.பிருந்தாகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார்.

மூன்று முறிப்பு, கொம்புவைத்தகுளம், இளமருதங்குளம், வீரப்பராயர் குளம், பனங்காமம், நட்டாங்கண்டல் ஆகிய கிராமங்களிற்கான பிரதான வீதியாக காணப்படும் மேற்படி வீதியானது, கடந்த முப்;பது ஆண்டுகளிற்கு மேலாக எந்;தவிதமான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், குண்டும் குழியுமாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையில் காணப்பட்டது.

மேற்படி கிராமங்களைச் சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் மடுப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட வலயன்கட்டு, விளாத்திக்குளம், முள்;ளிக்குளம், வேலான்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும் வவுனியா பிரதேசத்திற்கு உட்பட்ட பூவரசங்குளம், கல்மடு, கிடாச்சூரி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இவ்வீதியைப் பயன்படுத்தி வந்தனர்.

பெருமளவான் மக்கள் பயன்படுத்தும் இந்த வீதியினை, இராணுவத்தினரும் இப்பகுதி மக்களும் இணைந்து தற்காலிகமாக புனரமைத்து வருவதுடன், இதற்கு பிரதேச செயலகமும் உதவி செய்து வருவதாக பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .