2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் ஏப்ரல் மாதம் கல்வி மாநாடு

Kanagaraj   / 2014 மார்ச் 07 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23,24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கல்வி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

வடமாகாண சபை நிறுவப்பட்டதன் பின்னர் வடமாகாண கல்வியமைச்சர் டி.குருகுலராஜா மற்றும் வடமாகாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், கல்விமான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கல்வியமைச்சில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கின்ற கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் அதனோடு இணைந்து முரண்பாடுகள் குறுத்தும் ஆராயப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டை உயர்க்கல்வியமைச்சு,விளையாட்டு அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியன இணைந்தே நடத்தவிருக்கின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .