2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாம்பு தீண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

A.P.Mathan   / 2014 மார்ச் 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்
 
முல்லைத்தீவு முள்ளியவளையினைச் சேர்ந்த யோசேப் செல்வநாயகம் (68) என்ற முதியவர், கடந்த வாரம் பாம்பு தீண்டிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் வெள்ளிக்கிழமை (07) உயிரிழந்ததாக வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.
 
பாம்பு தீண்டிய வேளையில் முதலில் முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
 
இவரது சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .