2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மதில் உடைந்து வீழ்ந்ததில் குழந்தை உயிரிழப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 10 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியினைச் சேர்ந்த ஜெயசுகிர்தன் டினோஜன் (03) என்ற குழந்தை மதில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த குழந்தை தனது சகோதரனுடன் நேற்று (09) காலை விளையாடிக் கொண்டிருந்த நேரம் திடிரென வீட்டின் மதில் இடிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி குழந்தையை பெற்றோர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அக்குழந்தை இறந்துள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.

குறித்த மதிலின் மறுபக்கத்தில் மண் அகழப்பட்டிருந்தமையினால் மதிலின் அத்திவாரம் உறுதித்தன்மையினை இழந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .