2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


ஏ – 9 வீதி, மாங்குளம்,  பனிச்சங்களும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற  விபத்தில் படுகாயமடைந்த வாகனத்தின் சாரதியான ஸ்ரீரங்கம் முருகநாதன் (57) என்பவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (10) மாலை உயிரிழந்ததாக மாங்குளம் பொலிஸார்  தெரிவித்தனர்.

பனிச்சங்களும் பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று வீதியினைவிட்டு விலகி பாலத்திற்குள் பாய்;ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) விபத்துக்குள்ளானது. விபத்தினைச் செலுத்திச் சென்ற வாகனச் சாரதி இடையில் தூங்கியமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இதன்போது படுகாயமடைந்த வாகனச் சாரதி முதலில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சாரதி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

ஏ – 9 வீதி மாங்குளம் பனிச்சங்களும் பகுதியில் டிப்பர் ரக வாகனம் நேற்று முன்தினம் (09) வீதியினைவிட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்ததில் படுகாயமடைந்த வாகனத்தின் சாரதியான ஸ்ரீரங்கம் முருகநாதன் (57) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) மாலை உயிரிழந்ததாக மாங்குளம் பொலிஸார் இன்று (11) தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .