2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கமலேந்திரனை வைத்து கட்சியை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது: டக்ளஸ்

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும்,  சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று நான் உத்தரவினை வழங்கியிருந்தேன்.  ஆனால் இது தனிப்பட்ட நபரின் பிரச்சினை. சில ஊடகங்கள் கட்சியின் மீது குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா   (11) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'இந்தச் சம்பவம் கட்சியின் கொள்கையோ கோட்பாடோ அல்ல. இது ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினை. தென்னிலங்கையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் சுடப்பட்ட போது, அவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சியின் மீது குற்றச்சாட்டு வரவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரனின் பிரச்சினையினை கட்சியின் பிரச்சனையாக காட்ட சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

பல்வேறு வழிகளில் தற்போது ஆயுதங்கள் கிடைக்கின்றன. அவ்வாறானதொரு வழியில் ஆயுதங்கள் கிடைக்கப்பெற்று இந்தக் கொலைச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம். அண்மையில்  யாழில் கைது சய்யப்பட்ட ஆவா குழவிடமிருந்து கூட இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

எனவே ஆவா குழு வந்தாலும் கமல் குழு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .