2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சங்கிலித் திருடன் கைது

Menaka Mookandi   / 2014 மார்ச் 11 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் வயோதிப் பெண்ணொருவரின் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரிக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவரை இராணுவத்தினர் மடக்கிப் பிடித்து, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது.

வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த மேற்படி பெண்ணின் தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அறுத்துச் செல்ல முற்பட்ட வேளை, துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்றுகொண்டிருந்த இராணுவத்தினர், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளினைச் செலுத்திச் சென்றவர் தப்பியோடிவிட்டார். அவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடியவர்கள் தொடர்பாக பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .