2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலை ஜன்னல் கண்ணாடிக்கு கல்லெறிந்த பெண் கைது

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஜன்னல் கண்ணாடியொன்றிற்கு கல்லெறிந்து அதனைச் சேதப்படுத்திய பெண்ணொருவரை வைத்தியசாலைப் பாதுகாப்பு ஊழியர்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைப் பொலிஸார் புதன்கிழமை (12) தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பெண் வைத்தியசாலை விடுதிகளில் உணவுப் பார்சல்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றார்.

இன்றும் வழமைபோல விற்பனையில் ஈடுபட்டு வந்த அப்பெண் வைத்தியசாலை பார்வை நேரத்திற்கு முன்னதாக அத்துமீறி நுழைய முற்பட்டவேளை அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர். அவ்வேளை குறித்த பெண் வைத்தியசாலையின் ஜன்னல் கண்ணாடிக்கு கல்லெறிருந்துள்ளார்.

இதனால் ஒரு ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து குறித்த பெண்ணினை மடக்கிப் பிடித்த பாதுகாப்பு ஊழியர்கள் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு வைத்தியசாலை ஜன்னல் கண்ணாடிக்கு கல்லெறிந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .