2025 ஜூன் 28, சனிக்கிழமை

சங்கானையில் சுயதொழில் பயிற்சித்திட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள அருங்கலைகள் பேரவையின்  ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள  பெண்களுக்கான சுயதொழில் பயிற்சித்திட்டம் சங்கானையில்  சனிக்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் ரொட்டறிக் கழகத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும்  இப்பயிற்சியில் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த  90 பெண்களுக்கு பங்குபற்றுகின்றனர்.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, வடமாகாண ஆளுநர்  மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .