2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மனைப் பொருளாதார உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 88 பயனாளிகளுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (18) வழங்கப்பட்டன.

இந்த உபரகணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றதுடன், மேற்படி உபகரணங்களை  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேற்படி உபகரணங்கள் வழங்குவதற்காக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்கள் பிரதேச செயலக ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .