2025 ஜூன் 28, சனிக்கிழமை

கஞ்சா விற்ற இருவருக்கு பிணை: ஒருவர் பொலிஸ் தடுப்பில்

Kanagaraj   / 2014 மார்ச் 20 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.ஓட்டுமடம் பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 நபர்களில் இருவரைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததுடன், மற்றைய ஒருவரை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரின் அனுமதியுடன் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை (20) தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் கீழான புலனாய்வு பிரிவினரால் ஓட்டுமடத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) மாலை மூவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து 5 கிலோகிராம் கேரளாக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன. 

தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ்.பொலிஸ் நிலைய சட்டவிரோத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் நேற்று புதன்கிழமை (19) ஒப்படைக்கப்பட்ட போது, மூவரில் இருவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததுடன், மற்றைய ஒருவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று (19) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும்படி நீதிவானிடம் பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.

இதற்கு நீதவான் அனுமதியளித்ததினைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .