2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுமி மீது இளைஞன் துஷ்பிரயோகம்

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.கொட்டடிப் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, அதே இடத்தினைச் சேர்ந்த 19 வயது இளைஞனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (22) அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்.சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர் இன்று (23) தெரிவித்தனர்.

குறித்த சிறுமியினைக் காதலிப்பதாகக் கூறி குறித்த இளைஞர் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸரர் தெரிவித்தனர்.

இந்த துஷ்பிரயோகத்தினை மேற்கொண்ட குறித்த இளைஞனை தேடி வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .