2025 ஜூன் 28, சனிக்கிழமை

பெண்கள் கடமை, கண்ணியம், பண்பு ஆகியவற்றினை புறக்கணிக்ககூடாது: கணேசமூர்த்தி

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பெண்கள் கடமை, கண்ணியம், பண்பு ஆகியவற்றினை பெண்கள் புறக்கணிக்கக்கூடாது என யாழ்.ஜெயப்பூர் செயற்கைக்கால் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச செயலகம், கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'எமது பெண்கள் நாகரீகத்திற்கு ஏற்றவாறு கலாசாரத்தினை புறக்கணிக்கக்கூடாது. பெண்களுக்கு என்றும் தாய்மை முக்கியமானது. பெண்கள் கடமை, கட்டுப்பாடு, இறைபண்புகளை கடைப்பிடிப்பதுடன், தாய்மையினை மிக முக்கியமாக கருத வேண்டும்.

அதேவேளை, நவீனமய நாகரீகம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்காது நீந்தி கரையை சேர தெரிந்திருக்க வேண்டும்.

அந்தவகையில், இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வில் பெண்கள் கலந்து கொள்வதினால், எமது கருமங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கள் வெளிகாட்டப்படுகின்றன.

எனவே, முன்னைய காலத்தில் பெண்கள் அடிமைகளாகவும், பொம்மைகளாக இருந்த நிலையினை மாற்றி காலப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், நாம் பயணிக்கும் திசை சரியாக இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன், வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசிஸ், யாழ்.மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர் என்.ஏ.ஜெயராஜன், யாழ். மாவட்ட செயலகத்தின் இணைப்பாளர் (மகளிர் அபிவிருத்தி) உதயணி தவரட்ணம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .