2025 ஜூன் 28, சனிக்கிழமை

பனம்பொருள், உற்பத்தியாளர்களுக்கு உபகரணம்

Super User   / 2014 மார்ச் 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பனம்பொருள், கைப்பணி உற்பத்தியாளர்கள் 432 பேருக்கு ரூபா 4,32,000 பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நிதியில் வழங்கப்படும் இந்த உபகரணங்கள், முதற்கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பனம்பொருள் மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உற்பத்தியாளர் ஒருவருக்கு ரூபா 10,000 பெறுமதியில் இந்த உபகரணங்கள் 432 பேருக்கும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை 'பனை கித்துள் வாரம்' அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, பனை கித்துள் வாரம் அனுஷ்டிக்கப்படும் காலத்தில், வடகிழக்கு பகுதிகளில் 50 ஆயிரம் பனங்கன்றுகளை நடுகை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .