2025 ஜூன் 28, சனிக்கிழமை

வீதி முழுவதினையும் மறித்து புனரமைப்புப் பணிகள்

Super User   / 2014 மார்ச் 24 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐ.நேசமணி


யாழ்ப்பாணம் பொன்னாலைச் சந்தியை இணைக்கின்ற கல்லுண்டாய் வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முழுவதுமாக மூடப்பட்டு தற்காலிக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக அவ்வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தினையும் வலிகாமத்தினையும் இணைக்கும் மேற்படி வீதியினால் தினமும் பெருமளவான மக்கள் பயணித்து வரும் நிலையில் இவ்வாறு முற்றாக வீதியினை மூடி  புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதால் அவ்வீதியினூடாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வீதியினை விட மாற்று வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகள் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரமாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி, இ.போ.ச பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களில் பயணம் செய்த அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொளுத்தும் வெயிலில் காத்திருந்ததுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பற்ற செயல் பற்றியும் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.சுதாகரிடம் இதுபற்றிக் கேட்டபோது,

'குறித்த வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கப்படாததால் தற்காலிகமாகவே இந்த வீதி புனரமைப்புச் செய்யப்படுவதாக கூறினார். இன்று பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .