2025 ஜூன் 28, சனிக்கிழமை

வண்டிகளை திருடியவருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 மார்ச் 25 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்.அச்சுவேலிப் பகுதியில் அண்மைக்காலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த சந்தேக நபரான முதியவரை  எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.

அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த 61 வயதுடைய முதியவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அச்சுவேலி பகுதியில் இரு துவிச்சக்கர வண்டிகளையும், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஒரு துவிச்சக்கர வண்டியையும் திருடியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (23) உடுப்பிட்டிப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி முதியவரை திங்கட்கிழமை (24) பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .