2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்து; இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

யாழ். சுன்னாகம் தாவடிப்பகுதியில் வெள்ளக்கிழமை(28) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்பாணத்திலுருந்து சுன்னாகம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை வங்கிக்கு சொந்தமான ஹயஸ் வாகனமும் சுன்னாகத்திலிருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கணவன் மனைவி எனவும்  இவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .