2025 ஜூன் 28, சனிக்கிழமை

தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை  (31)  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தாதிய உத்தியோகத்தர்களுக்கு மனநோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய இரு பயிற்சிகள் சுகாதார அமைச்சினால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும்,  இதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிட விடாமல் அரசாங்க வைத்திய சங்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனைக் கண்டித்து தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக யாழ். போதனா  வைத்தியசாலையின் தாதிய சங்கத் தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும்; 03ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .