2025 ஜூன் 28, சனிக்கிழமை

சங்கிலித் திருடன் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். அச்சுவேலி பொயிட்டி பிரதேச வீதியில் செவ்வாய்க்கிழமை (1) மாலை பெண்ணெருவரின் சங்கிலியினை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்ற நபரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து தங்களிடம் ஒப்படைத்ததாக கோப்பாய் பொலிஸார் புதன்கிழமை (02) தெரிவித்தனர்.

குப்பிளான் வடக்கு சுன்னாகத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .