2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ். பொது நூலகத்தில் 'யூத் கோணர்'

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


சிங்கப்பூர் சர்வதேச நிதியத்தின் நிதியுதவியுடன் யாழ். பொது நூலகத்தில் யாழ். மாவட்ட இளைஞர் யுவதிகளின் ஆங்கில அறிவை விருத்தி செய்யும் நோக்கில் 'யூத் கோணர்' வெள்ளிக்கிழமை (4) யாழ். பொது நூலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யூத் கோணரின் நடமாடும் நூல் நிலையத்திற்குத் தேவையான பேருந்து ஒன்றும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் சிங்கப்பூர் சர்வதேச நிதியம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை (4) வருகை தந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இந்த 'யூத்  கோணரை' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், பேருந்து மற்றும் நூல்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திசிறி, யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .