2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிடைக்கும் அனுபவங்களை வாழ்வில் வெற்றிபெறுவதற்கு பயன்படுத்துங்கள்: சிவானந்தன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.குகன்


வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எதையும் கற்றலுக்கான அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். முடியாது என்பதினை வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்காவில் அமைந்துள்ள சிவானந்தன் ஆய்வகத்தின் நிறுவுனரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் நேற்று (15) தெரிவித்தார்.

யாழ்ப்பானம் றோட்டறிக் கழகத்தின் 73ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும்இ சாதனையாளர் உரை நிகழ்வும்இ யாழ்ப்பாணம் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ 'வாய்ப்புக்கள் எப்போதும் இருக்கும். அந்த வாய்ப்புக்களினை இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். உங்களிற்கு பிடித்த துறையில் சாதிப்பதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும்' என்றார்.

'மற்றவர்கள் வைத்தியர்களாக பொறியியலாளர்களாக வருகின்றார்கள் என்பதற்காக நீங்களும் அவ்வாறு வரவேண்டும் என்பதல்ல. உங்களது விரும்பமும் முயற்சியும் எத்துறையில் உள்ளதோ அத்துறையில் சாதனை படைக்கவேண்டும்.

எத்துறையிலும் சாதனை என்பது யார் முதலில் செய்கிறார்களோ அவர்கள் தான் முதன்மையானவர்களாக விளங்குவார்கள். நீங்களும் முதன்மையானவர்களாக விளங்க வேண்டும். நாம் எதையும் தனியாக செய்யமுடியாது.

உங்களைச் சுற்றி பக்கத்திலே பெரியவர்களினை வைத்திருங்கள் அப்போது சாதனை இலகுவாக்கப்படுவதுடன் நீங்களும் வளர முடியும். எதையும் செய்யும் போது எதை விரும்புகின்றீர்களோ அதை நோக்கி நகருங்கள் உங்களது நண்பர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக செய்யாதீர்கள்' என்று அவர் கூறினார்.

'நான் இவ்வளவு சாதனை படைப்பதற்கும் உயர்வதற்கும் காரணமாக இருந்தது இந்த   யாழ்ப்பாணத்து மண் தான். இதுவே எனக்கான ஆளுமை மாற்றத்திற்கு காரணமாக இருந்ததுடன்இ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலே நான் கல்விகற்று வந்தேன்.

இப்பாடசாலைகளில் கற்ற கல்வியும் என்னை வழிப்படுத்திய ஆசிரியர்களும் எனது இத்தகைய உயர்விற்கு காரணமாக இருந்தார்கள். குறிப்பாக மட்டுவில் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர்கள் எம்மை தமது சொந்த பிள்ளைகள் போன்று வழி நடத்தினார்கள்.

அடைய முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பதினை இங்கிருந்தே கற்றுக்கொண்டேன். விடாமுயற்சியின் ஊடாக எதையும் அடைய முடியும் என்பதினை நான் கற்றுக்கொண்டேன். மலை ஏற வேண்டும் எனில் அம்மலையினை பார்த்து பயப்படக்கூடாது அவ் இலக்கினை நான் அடைந்தே தீருவேன் என நம்புவதுடன் விழாமல் நான் நடப்பேன்' என யோசித்து செயற்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசாஇ ஈ.சரவணபவன்இ வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்  வடமாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன்இ யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் வீ.கணேசராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்இ பாடசாலைகளின் அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ மாணவர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .