2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன் 


யாழ். பருத்தித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளொன்றும்  மோட்டார் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்தபோது,  சைக்கிளில் சென்றவர் திடீரென திருப்ப முற்பட்ட வேளையிலே இவ்விபத்து சம்பவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பருத்தித்துறை மணல் ஒழுங்கையைச்  சேர்ந்த இருதய மனோகரன் சியாம் (வயது 22), குணசீலன் பிரேம்குமார் (வயது 20) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .