2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் மீது சேஷ்டை புரிந்தவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மல்லாகம் சந்தியில் மதுபோதையில்  பொதுமக்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் பெண்கள் மீது சேட்டைகள் புரிந்த நபர் ஒருவரை இன்று(25) மதியம் கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X