2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மகாஜன, அருணோதயா கல்லூரி மாணவர்கள் சாதனை

Kanagaraj   / 2014 மே 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜே.அனித்தா சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மேற்படி போட்டியில் 18 வயதுப் பெண்கள் கோலூன்றிப் பாய்தலில் 3.00 மீற்றர் உயரம் பாய்ந்து அனித்தா இந்தச் சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.

முன்னர் இருந்த 2.95 மீற்றர் பாய்ந்து சாதனையினை இவர் முறியடித்துள்ளார்.

இதே வேளை ஆண்கள் பிரிவில்  யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரியை சேர்நத மாணவனான கருணாகரன் நத்தலின் ஜோய்ஸன் 3.96 சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு - இந்திரரத்ன பாலசூரிய)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X