2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின்கலம் திருடியோர் கைது

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஓட்டுமடம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றிலிருந்து மின்கலத்தினைத் திருடிய இருவரை  ஞாயிற்றுக்கிழமை (04) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுமடம் செழியன் வீதியினைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனும் அவரது வீட்டில் தங்கியிருந்த  கிளிநொச்சியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் மின்கலத்தினை திருடுவதினை அவதானித்த மூதாட்டியொருவர் பொலிஸாரிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X