2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

Kanagaraj   / 2014 மே 05 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா 

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தினைச் சூழ்ந்து கொண்ட மக்களினால் பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பொதுமக்களை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிற்கும் படி பொலிஸ் நிலைய வாயிலில் வைத்து குறித்த சந்தேகநபரை பொதுமக்களுக்கு காட்டிவிட்டு மல்லாகம் நீதிமன்றத்திற்கு; பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மல்லாகம் நீதிமன்றத்திலும் பெருமளவு பொதுமக்கள் சூழ்ந்திருப்பதினால், அங்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X