2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆயுதங்கள் மீட்பு : மனைவிக்கு விளக்கமறியல்

Super User   / 2014 மே 05 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் வீடொன்றில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணினை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே.சபேசன் ஞாயிற்றுக்கிழமை (04) உத்தரவிட்டார்.

மேற்படி பெண்ணினை ஞாயிற்றுக்கிழமை (04) பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான கந்தையா வருணன் என்பவரது வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை (03) ரி 56 துப்பாக்கி, ஒரு மகஸீன், 15 ரவைகள் உள்ளிட்டவை ஊர்காவற்றுறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன.

குறித்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரது மனைவி கைது செய்யப்பட்டு, ஞயிற்றுக்கிழமை (04) நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X