2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இனந்தெரியாத நபர்கள் பல்கலைக்குள் வந்தால் முறையிடவும்

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது குறித்த அறிந்தால்; அது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யலாம் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்போது, 'பல்கலைக்கழக வளாகத்தில் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்தால் பொலிஸார் அதனைக் கவனத்தில் எடுப்பதில்லை' என்று ஊடகவியலாளர்கள் வினாவியதிற்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் இதுவரையிலும் வரவில்லையெனவும், அவ்வாறு நடைபெற்றால் பொலிஸ் நிலையங்களிலோ அல்லது தலைமைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X