2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறையிலிருந்து மன்னாருக்கு பேருந்து சேவை

Kanagaraj   / 2014 மே 09 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறையிலிருந்து மன்னாரிற்கு பேருந்து சேவை இன்று வெள்ளிக்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் எஸ்.கந்தசாமி இன்று (09) தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவையானது அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து புறப்பட்டு நெல்லிடி ஊடாக சாவகச்சேரி சென்றடைந்து தொடர்ந்து ஏ – 32 வீதி வழியாக மன்னாரைச் சென்றடையும் என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் அநேகரின் வேண்டுகோளிற்கிணங்கவே இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X