2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காயமடைந்த இராணுவ வீரர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றம்

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன் 

கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாமயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவ வீரர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (12) மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி சுண்டிக்குளம் குகேனி பயிற்சி முகாமைச் சேர்ந்த டபிள்யு.ஜி.எஸ்.தர்ஷன (25) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு இவர் சென்றபோது, அங்கு பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த இவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக திங்கட்கிழமை (12) கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X