2025 ஜூன் 30, திங்கட்கிழமை

திருமணம் செய்வதாக பணமோசடி : சிலாபம் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு

Kogilavani   / 2014 மே 14 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிலாபம் பகுதியினைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதாக 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பண மோசடி செய்த வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த நபரை அதே பெறுமதியிலான இரண்டு ஆட்பிணையில் விடுவித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன், மேற்படி நபரை சிலாபம் நீதிமன்றில் ஆஜராகும்படியும் செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியினைச் சேர்ந்த சந்திரமோகன் தர்ஷன் (22) என்ற மேற்படி நபர் சிலாபத்தினைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி அவரிடமிருந்து 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மோசடி செய்துவிட்டு வல்வெட்டித்துறைக்கு தப்பி வந்துவிட்டார்.

இந்நிலையில் குறித்த பெண் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், சிலாபம் பொலிஸார் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (13) கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X