2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாணவியைத் தாக்கிய மாணவன் எச்சரிக்கையின் பின் விடுதலை

Kanagaraj   / 2014 மே 14 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(12) மாணவியொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இளைஞனை எச்சரிக்கை செய்து இன்று புதன்கிழமை(14) காலை விடுவித்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் பெற்றோர் மாணவியின் நலன்கருதி விடுத்த வேண்டுகோளையடுத்து குறித்த மாணவன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.திருநெல்வேலி பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மீது திங்கட்கிழமை(12)  குறித்த இளைஞன்  கன்னத்தில் அறைந்ததாக மாணவியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X